நீங்கள் இருப்பது இங்கே:HomeCommunication & MediaPostal Service வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்
வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்
தகைமைகள்:
இலங்கை பிரசைகளிற்கும் இந்த நாட்டிற்கு வந்துள்ள எந்தவொரு வெளிநாட்டவருக்கும் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவமொன்று இல்லை. எனினும் பொதி, வெளிநாட்டு மொத்த பிரிவிற்கு கிடைத்த தினத்திற்கு மறுநாள், இந்தப் பிரிவால், பதிவுத் தபால் மூலம் அறிவித்தலொன்று உரியவருக்கு அனுப்பப்படும். (அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
கட்டணம் அறவிடப்பட மாட்டாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து 5 கடமை நாட்களிற்குள் மு.ப. 9.30 மணி முதல் 12.00 மணி வரை மட்டும்.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
வெளிநாட்டு மொத்தப் பொதியொன்றிற்கு தபால் கட்டணமாக 50/- ரூபாவூம், சுங்க வரி இருந்தால் அந்தக் கட்டணமும் அறிவித்தலில் குறிப்பிட்ட தினம் கடந்திருந்தால் களஞ்சிய கட்டணமாக ஒரு பொதிக்கு ஒரு நாளைக்கு 25/- ரூபா வீதமும் அறவிடப்படும்.
சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
அறிவித்தல் பொதி உரிமையாளரிற்கு கிடைத்து, இந்த இடத்திற்கு சமர்ப்பித்ததன் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் அளவில செலவாகும்.
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
கடித உரியாளியினால் பொறுப்பளிக்கப்பட்ட இன்னொருவருக்கு பொருட்கள் ஒப்படைக்கப்படும். (உரிமையை பொறுப்பளிக்கும் பத்திரம் அறிவித்தலின் கீழ் கழசஅ யூ யின் கீழ் காட்டப்படும்.)
இந்தப் பிரிவிற்கு வர முடியாத ஒருவருக்கு தனக்கு மிக அருகிலுள்ள இலங்கையில் எந்தவொரு பிரதான தபால் அலுவலகத்திற்கும் வரவழைத்துக் கொள்ள முடியும்.
சுங்க விடுவிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள கண்டி மற்றும் காலி பிரதேசங்களிற்கு அருகிலுள்ள முகவரியயுடையவர்களுக்கான மொத்தப் பொதிகள் அந்தக் அலுவலகங்களிற்கு அனுப்பப்படும்.
மாதிரிப் பத்திரம் 01---வெளிநாட்டில் மொத்தப் பொதி உரிமையாளர்களிற்கு அனுப்பப்படும் அறிவித்தல் மாதிரிப் பத்திரம் 02---கண்டி (மத்திய மாகாணம்) காலி (தென் மாகாணம்) என்பவற்றிற்கு அனுப்பப்படும் அறிவித்தல் மாதிரிப் பத்திரம் 03---பொதியை இந்த இடத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள முடியாத பொதி உரிமையாளர்களிற்கு, உரிய முகவரிக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு வரவழைத்துக் கொள்ளும் மாதிரிப் பத்திரம் மாதிரிப் பத்திரம் 04---இந்தஇலக்கம் 03 இல் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் பொதியை பயண முடிவு அலுவலகத்திற்கு வரவழைத்துக் கொள்வதாயின் 03ஆம் இலக்கத்தின் மூலம் காட்டப்படும் படிவமும் அனுப்பப்படும். மாதிரிப் பத்திரம் 05---சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டால் 04 ஆம் இலக்க இளஞ்சிவப்பு மாதிரியையும் இணைத்தல் வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்
தபால் திணைக்களம்
3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000
திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்) தொலைபேசி:+94 0112328301-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555 மின்னஞ்சல்:info@slpost.lk இணையத்தளம்: www.slpost.gov.lk
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.